Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by Anonymous in ,    
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரியலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசு மத்திய பட்ஜெட்டில் இன்சூரன்ஸ், ராணுவத்தில், அன்னிய முதலீட்டை கண்டித்தும் ரெயில்வே துறை தலைவர் மயமாவதை கண்டித்தும் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.பி.ஐ. சார்பாக மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, ஜெயராஜ், மகாலிங்கம், ராஜேந்திரன், கிருஷ்ணன், சி.பி.எம். சார்பாக மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு துரைசாமி, ஒன்றிய செயலாளர் சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: