Thursday, March 05, 2020

On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
அத்துமீறி அண்ணன்  வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளால் கிராமம் காலணி தெருவைச் சேர்ந்தவர்  முரளிராஜாவின் மகன் முரளி(32). இவருக்கு வெற்றிச்செல்வி என்ற மனைவியும்,10 வயதிற்க்குள் 2 மகன் களும்,ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக வீடு இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பிழைப்புபிழைப்பு நடத்தி வருகிறார்.அதேபோல சற்று அருகே இவருடைய அண்ணன் பிரபு(35) தன் மனைவி சுதாவுடன் தனியாக வசித்து வருகிறார். பிரபு வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கும்  கலியமூர்த்தி மகன் வசந்தகுமார் (24).இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதில் பிரவு,,முரளியின்  மனைவிகள் அக் கா,தங்கைகளாவார்கள்


இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன் குடிபோதையில் பிரபுவின் வீட்டிற்கு இரவில்  தவறான நோக்கத்துடன்   அத்துமீறி உள்ளே புகுந்துள்ளார். இதை கண்ட பிரபு வசந்தகுமாரை பிடித்து விசாரிக்கையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வசந்தகுமார் இங்கிருந்தால் பிரச்சனையாகிவிடும் எண்ணி அவனது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று மறைந்து கொள்ளும்படி  அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவரிடம் முரளி குடும்பத்தினர்  புகார் கூறியுள்ளனர். ஊர் பெரியவர்களும் வசந்தகுமாரின் பெற் றோரிடம் அவனை ஊருக்கு வரச்சொல்லியுள்ளனர். ஆனால் கிராமத்தின் விசாரணைக்கு முன் வசந்தகுமார் முரளி கண்முன் மோட்டார் சைக்கிளில்  போக்கு காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி தன் அண்ணன் பிரபுவை கூட்டிக் கொண்டு வசந்தகுமாரிடம் கேட்க வீட்டிற்கு சென்றுள்ளார்.பிரபு தூங்கிக் கொண் டிருந்நதால் திரும்பிய  முரளியை வசந்தகுமார் அம்மா புஷ்பா திட்டியதால் இதைக் தட்டி கேட்ட முரளியை வசந்தகுமார், தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா,வசந்தகுமாரின் அக்கா கணவர் நாகராஜ் மற்றும் உறவினர்கள் என 6 பேர் கொண்ட கும்பல் முரளியை தாக்கியுள்ளனர். ஏற்கனவே கொலைத் திட்டத்தோடு  மதுபோதையில் இருந்த வசந்தகுமார் அன் கோ  கத்தியால் சரமாரியா குத்தியுள்ளனர். 9 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (60) என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கு கத்திகுத்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.


தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். வசந்நகுமார்,அவரது அக்கா கணவர் நாகராஜ்,தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா  ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து ்வருகின்றனர்.

0 comments: