Saturday, November 08, 2014
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு நடவு முன்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் அணை நிரம்பி வந்த காலங்களில் முப்போகம் கரூர் மாவட்டத்தில் சாகுபடியானது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்புவதும், கரூர் மாவட்டத்திற்கு ஆற்றில் தண்ணீர் வருவதும் எப்போதாவது நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர்உரிமையும் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு கைகொடுக்கவில்லை. இதனால் வேளாண் பணிகளை மேற்கொள்ளவில்லை. சோளம், அவுரி செடி போன்றவைகளை மட்டும் பயிரிடப்பட்டது.ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கடந்த மாதம் அமராவதி அணை நிரம்பியது. தற்போதும் நீர்மட்டம் 85அடிக்கு மேல் உள்ளது.
இதனால் கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபோக சாகுபடியாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதேபோன்று கரும்பு விவசாயிகளும் கரும்பு பயிர் நடவு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment