Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு           

கரூர் அருகே உள்ள தாந்தாணிமலை கணபதிபாளையம் வடக்கு விக்னேசுவரா நகரில் வசிப்பவர் ராஜா (46). ஓசூர் அருகே இவரது மாமியார் வீடு உள் ளது. மனைவி அங்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக நேற்றுமுன்தினம் ராஜா ஓசூருக்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கேடின் பூட்டை திறந்து உள்ளே சென்றபோது மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்து. திருடுபோன நகை களை வங்கியில் அடமானம் வைத்திருந்து நேற்றுமுன்தினம் தான் திருப்பி வந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

0 comments: