Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

புதிய தமிழகம் கரூரில் ஆர்ப்பாட்டம்                                   கரூர்புதிய தமிழகம் கட்சியினர் கரூரில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 மள்ளர், பள்ளர் உள்ளிட்ட உட்பிரிவுகளை ஒன்றாக இணைநத்து தேவேந்திர குலவேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரரும், இமானுவேல்சேகரன் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்தனம், முருகேசன், சசி, அருண், தினேஷ், ஜெய், முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். சுப்பிரமணியன், சுகராஜா, ஸ்டீபன்ராஜ், ஆறுமுகம், தனம், தமிழரசி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்ணுசாமி, மனோகரன் நன்றி கூறினர்.

0 comments: