Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

மாவட்ட தடகள போட்டி சேரன் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்              கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே யான தடகள போட்டி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றது. இதில் வெண்ணைமலை சேரன் மெடரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் விக்னேஷ் 400மீ, 600மீ ஓட் டம் முதல் இடம், உயரம் தா ண்டுதலில் 2ம்இடம் பெற்றார். 17வயது பிரிவில் அஜீத்குமார் 100மீ, 200மீ ஓட்டம் முதலிடம், கரண் 400மீ ஓட் டம் 2ம்இடம், நவநீத் 800மீ, 1500மீ ஓட்டம் முதல்இடம் பெற்றனர். கிஷோர்குமார் உயரம் தாண்டுதலில் முதல்இடம், அஜய்கண்ணன் வட்டு எறிதலில் 2ம்இடம், 4-100மீ தொட்ஓட்டத்தில் அஜீத்குமார், பிரேம்குமார், சரவணா, கரண் ஆகியோர் முதல்இடம் பெற்றனர்.

 19வயதுக்குட்பட்டோர் பிரிவில் தினேஷ்குமார் உயரம் தாண்டுதல் முதல்இடம், 400மீ ஓட்டத்தில்2ம்இடம் பெற்றார், அதீப்ராஜ் வட்டுஎறிதலில் 2ம்இடம், கோபிநாத் வட்டுஎறிதல் 3ம்இடம், ஹரிவிஜெய் ஈட்டிஎறிதல் முதல்இடம், 4-400மீ தொடர்ஓட்டபோட்டியில் உதயநிதி, கார்த்திக்ராஜா, கவின், நிக்கீத் முதல்இடம் பெற்றனர். 400 மீ தொடர் ஓட்டத்தில் தினேஷ்குமார், தினகரன், கரன், விக்னேஷ் 3இடம் பெற்றனர். 74 புள்ளிகளுடன் மாவட்ட அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரிவில் வென்றனர். தொடர்ந்து 7வதுமுறையாக ஒட்டு மொத்தசாம்பியன் பட்டத்தை வென்றனர்.

 குழு போட்டியில் டென்னிஸ், இறகு பந்துபோட்டிகளில் வெற்றிபெற்று மண்டல அளவி லான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றிபெற்ற மா ணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை சேரன்பள்ளிகளின் தலைவர் கருப்பண்ணன், தாளாளர் பாண்டியன், நிர்வாகி பெரியசாமி, ஆலோசகர் செல்வதுரை, முதல்வர் பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.       

0 comments: