Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

பொசியம்பட்டியில் நாளை சாம்பியன்ஷிப் கபடி போட்டி                           கடவூர்அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி போட்டி நாளை பொசியம்பட்டியில் நடக்கிறது. 

கரூர் மாவட்ட அளவில் அமெச்சூர் கபடி கழகம், காந்தி கபடிக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டி தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் நாளை (9ம்தேதி) நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் 80 கிலோ எடைக்குள் இருந்தால் மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தர்மபுரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்படும் என அமெ ச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

0 comments: