Saturday, November 08, 2014
அரசு மருத்துவமனைகளில் மெட்ராஸ் ஐக்கு சிகிச்சை கலெக்டர் தகவல் கரூர், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐக்கு தேவை யான சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.
கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மெட்ராஜ் ஐ எனப்படும், விழி வெளி இமை தொற்று நோய் அடினோ என்ற வை ரஸ் கிருமி மூலம் உண்டாகிறது. இந்நோய் பாதித்தவர் களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய்பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். கண்வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர்வடியும், கண்அழுத்தம் இருக்கும். காலையில் கண்விழிக்கும்போது கண் களை திறக்க கடினமாக இரு க்கும். கண்கள் ஒட்டி காண ப்படுவது போன்றவை கண் நோ யின் அறிகுறிகளாகும்.
கண்ணில் இருந்து வடியும் நீரினால் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதி ப்புள்ள அந்த நீர் பிறர் கை யில் படும்போது அவருக்கும் கண்நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. கண்நோய் பாதித்தவர்களின் படுக்கை, துண்டு, கைக்கு ட் டை போன்றவற்றை மற்றவர் கள் பயன்படுத்தக்கூடாது. அதன்மூலம் அவை பரவும்.
எனவே மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர் கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்நோய் வந்தால் குறை ந்தது ஒருவாரம் முதல் 10நாட்கள் வரை இருக்கும். அரு கில் உள்ள கண் மருத்து வரை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி தானே போட்டுக்கொள்ளக்கூடாது. இந்நோய்க்கு தேவையான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment