Saturday, November 08, 2014
அரசு மருத்துவமனைகளில் மெட்ராஸ் ஐக்கு சிகிச்சை கலெக்டர் தகவல் கரூர், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐக்கு தேவை யான சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.
கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மெட்ராஜ் ஐ எனப்படும், விழி வெளி இமை தொற்று நோய் அடினோ என்ற வை ரஸ் கிருமி மூலம் உண்டாகிறது. இந்நோய் பாதித்தவர் களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய்பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். கண்வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர்வடியும், கண்அழுத்தம் இருக்கும். காலையில் கண்விழிக்கும்போது கண் களை திறக்க கடினமாக இரு க்கும். கண்கள் ஒட்டி காண ப்படுவது போன்றவை கண் நோ யின் அறிகுறிகளாகும்.
கண்ணில் இருந்து வடியும் நீரினால் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதி ப்புள்ள அந்த நீர் பிறர் கை யில் படும்போது அவருக்கும் கண்நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. கண்நோய் பாதித்தவர்களின் படுக்கை, துண்டு, கைக்கு ட் டை போன்றவற்றை மற்றவர் கள் பயன்படுத்தக்கூடாது. அதன்மூலம் அவை பரவும்.
எனவே மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர் கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்நோய் வந்தால் குறை ந்தது ஒருவாரம் முதல் 10நாட்கள் வரை இருக்கும். அரு கில் உள்ள கண் மருத்து வரை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி தானே போட்டுக்கொள்ளக்கூடாது. இந்நோய்க்கு தேவையான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment