Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அரசு மருத்துவமனைகளில் மெட்ராஸ் ஐக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்          கரூர், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐக்கு தேவை யான சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.

 கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 மெட்ராஜ் ஐ எனப்படும், விழி வெளி இமை தொற்று நோய் அடினோ என்ற வை ரஸ் கிருமி மூலம் உண்டாகிறது. இந்நோய் பாதித்தவர் களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய்பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். கண்வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர்வடியும், கண்அழுத்தம் இருக்கும். காலையில் கண்விழிக்கும்போது கண் களை திறக்க கடினமாக இரு க்கும். கண்கள் ஒட்டி காண ப்படுவது போன்றவை கண் நோ யின் அறிகுறிகளாகும். 
 கண்ணில் இருந்து வடியும் நீரினால் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதி ப்புள்ள அந்த நீர் பிறர் கை யில் படும்போது அவருக்கும் கண்நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. கண்நோய் பாதித்தவர்களின் படுக்கை, துண்டு, கைக்கு ட் டை போன்றவற்றை மற்றவர் கள் பயன்படுத்தக்கூடாது. அதன்மூலம் அவை பரவும்.

 எனவே மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர் கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்நோய் வந்தால் குறை ந்தது ஒருவாரம் முதல் 10நாட்கள் வரை இருக்கும். அரு கில் உள்ள கண் மருத்து வரை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி தானே போட்டுக்கொள்ளக்கூடாது. இந்நோய்க்கு தேவையான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.         

0 comments: