Saturday, November 08, 2014
கரூர் மாவட்டத்தில் இன்று ரேசன்
குறைதீர் கூட்டம் கரூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தில் ரேஷன்கடை குறைபாடு, குடும்பஅட்டையில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தம் புதியஅட்டைகோருதல், போன்ற குறைகளை களைவதற்கு பொதுவிநியோக குறைதீர்நாள் கூட்டம் இன்று (8ம்தேதி) கரூர் தாலுகா கே.பிச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது. அரவக்குறிச்சி தாலுகாவில் வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி அலுவலகத்திலும், குளித்தலை தாலுகாவில் ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பாலராஜபுரம் வீரராக்கியம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கடவூர் தாலுகாவில் கீழப்பகுதி ஊராட்சி அலவலகத்திலும், மண்மங்கலம் தாலுகாவில் பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடக்கிறது. சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தீர்வு செய்துகொள்ளலாம் என கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment