Saturday, November 08, 2014
| தரைப்பாலம் சீரமைக்கும் பணி கரூர் கடந்த 1967ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் பழுதடைந்ததால் உயர்மட்டப்பாலம் இதே இடத்தில் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையத்தையும், ஐந்துரோடு பகுதியையும் இணைக்கும் வகையில் புதிய உயர்மட்டப்பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் 14ம்தேதி புதிய பாலப்பணி துவக்கி வைக்கப்பட்டது. பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்டப்படுவதால் பழைய பாலம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இந்த இடத்தில் புதிய உயர்மட்ட பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் வேலை தற்போது நடைபெற்று வந்தது.புதிய பாலப்பணிகள் நடைபெறுவதால் பசுபதிபாளையம்- கரூர் இடையே பொதுமக்கள் போக்குவரத்துக்கு தற்காலிக குழாய் பாலம் இதன் அருகே அமைக்கப்பட்டுள்ளது. புதிய ராட்சத சிமெண்டு குழாய்களை அமைத்து அதன்மேல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் தற்போது இருசக்கர வாகனங்கள். ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் சென்று வந்தன. கடந்த ஓராண்டாக இப்பாலத்தில் டூ வீலர்கள், ஆட்டோ, வேன்கள் சென்று வந்தன. மண்பாலம் தொடர்மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் அமராவதி அணை நிரம்பியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கடந்த 22ம்தேதி பசுபதிபாளையம் தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.தற்போது அமராவதி ஆற்றில் வெள்ளநீர் வடிந்து விட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தற்காலிக தரைப்பாலத்தை மீண்டும் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இருபுறமும் உள்ள அணுகுசாலையை செப்பனிடும் பணி அடுத்து நடைபெற உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். | 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment