Sunday, November 09, 2014
கரூரில் தி.மு.க. கூட்டத்தில் மோதல்–சட்டை கிழிப்பு: தொண்டர்கள் தள்ளு முள்ளு .... கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது எழுந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இன்று கரூர் அண்ணாநகரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரச்சனைக்குரிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சனை குறித்து சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு, மற்றும் நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜிற்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருவருக் கொருவர் தாக்கினார்கள். இதில் கனராஜின் சட்டை கிழிந்தது.
இதனை கண்டதும் நன்னியூர் ராஜேந்திரன் கனகராஜை அறிவாலயத்திற்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது கனக ராஜின் ஆதரவாளர்கள் பாலகுருவை தாக்குவதற்காக தடியுடன் கூடினார்கள். அப்போது அங்கு வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கூட்டத்தை கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டார். அப்போது கனகராஜின் ஆதரவாளர்கள் ஆண்டாள் பாலகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க ஆக்ரோஷமாக பாய்ந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நிலைமை மோசமானதால் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்த கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அறிவாலயம் பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment