Sunday, November 09, 2014
கரூரில் தி.மு.க. கூட்டத்தில் மோதல்–சட்டை கிழிப்பு: தொண்டர்கள் தள்ளு முள்ளு .... கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது எழுந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இன்று கரூர் அண்ணாநகரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரச்சனைக்குரிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சனை குறித்து சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு, மற்றும் நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜிற்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருவருக் கொருவர் தாக்கினார்கள். இதில் கனராஜின் சட்டை கிழிந்தது.
இதனை கண்டதும் நன்னியூர் ராஜேந்திரன் கனகராஜை அறிவாலயத்திற்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது கனக ராஜின் ஆதரவாளர்கள் பாலகுருவை தாக்குவதற்காக தடியுடன் கூடினார்கள். அப்போது அங்கு வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கூட்டத்தை கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டார். அப்போது கனகராஜின் ஆதரவாளர்கள் ஆண்டாள் பாலகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க ஆக்ரோஷமாக பாய்ந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நிலைமை மோசமானதால் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்த கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அறிவாலயம் பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
0 comments:
Post a Comment