Sunday, November 09, 2014
அசம்பாவித சம்பவங்களால்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தனர். இப்பிரச்னைக்கு பின், மாயனூர் இன்ஸபெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பிச்சம்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.மோதலை தடுக்கச் சென்ற, இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், கோடிலிங்கம், ஏட்டு ஆனந்த் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இரு தரப்பை சேர்ந்த, 42 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, பதட்டம் நிலை ஏற்பட்டதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கிடையில் மாயனூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கரூர் மதுவிலக்கு பிரிவுக்கும், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், மாயனூர் ஸ்டேஷனுக்கும், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, தஞ்சாவூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஜயாபுரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வெங்கமேடு ஸ்டேஷனுக்கு வருகிறார்.மாயனூர் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடப்பதால், இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment