Sunday, November 09, 2014
அசம்பாவித சம்பவங்களால்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தனர். இப்பிரச்னைக்கு பின், மாயனூர் இன்ஸபெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பிச்சம்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.மோதலை தடுக்கச் சென்ற, இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், கோடிலிங்கம், ஏட்டு ஆனந்த் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இரு தரப்பை சேர்ந்த, 42 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, பதட்டம் நிலை ஏற்பட்டதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கிடையில் மாயனூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கரூர் மதுவிலக்கு பிரிவுக்கும், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், மாயனூர் ஸ்டேஷனுக்கும், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, தஞ்சாவூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஜயாபுரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வெங்கமேடு ஸ்டேஷனுக்கு வருகிறார்.மாயனூர் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடப்பதால், இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment