Sunday, November 09, 2014
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோணி பொன்நகர் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், குடிநீர் வழங்குவதற்காக நடைபெறும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.தான்தோணி பொன் நகர் பகுதியில், 25 கோடியே, 18 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அருகில் தரை நிலை நீர் தேக்க நிலையம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, தற்போது, நீர் தேக்க தொட்டியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதாக, பொறியாளர்கள் தெரிவித்தனர். பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.திண்ணப்பா நகர் பகுதியில், 25 கோடியே, 38 லட்சம் மதிப்பில், 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.கரூர் நகர் பகுதியில், இருந்து பசுபதிபாளையம் இணைக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, தற்போது மழை வெள்ளத்தால், சேதமான தற்காலிக தரைப்பாலம், நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு, இரண்டு நாட்களில் சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்.தான்தோணி பஞ்சாயத்து யூனியன், டி. செல்லாண்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கன்னவாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகார்த்திகேயன், கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோணி பொன்நகர் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், குடிநீர் வழங்குவதற்காக நடைபெறும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.தான்தோணி பொன் நகர் பகுதியில், 25 கோடியே, 18 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அருகில் தரை நிலை நீர் தேக்க நிலையம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, தற்போது, நீர் தேக்க தொட்டியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதாக, பொறியாளர்கள் தெரிவித்தனர். பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.திண்ணப்பா நகர் பகுதியில், 25 கோடியே, 38 லட்சம் மதிப்பில், 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.கரூர் நகர் பகுதியில், இருந்து பசுபதிபாளையம் இணைக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, தற்போது மழை வெள்ளத்தால், சேதமான தற்காலிக தரைப்பாலம், நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு, இரண்டு நாட்களில் சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்.தான்தோணி பஞ்சாயத்து யூனியன், டி. செல்லாண்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கன்னவாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகார்த்திகேயன், கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment