Sunday, November 09, 2014
கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு தியேட்டருக்கு அபராதம் கரூர் மாவட்டத்தில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக, ஏழு சினிமா தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக, கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது.கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர், துணைதாசில்தார் அடங்கிய குழுவினர், கரூர் நகர் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், சோதனை மேற்கொண்டனர். கரூர் நகரில், நான்கு தியேட்டர்களில், 25 ரூபாய் டிக்கெட்டை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல், குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ், தலைமையிலான குழுவினர் குளித்தலை, காவல்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் சோதனை செய்ததில், மூன்று தியேட்டர்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment