Friday, November 21, 2014
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ் வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரிகள் தங்கபாலு, திருநாவுக்கரசு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் செல்லக்குமார், முன்னாள் எம்.பி.க்கள் ஆரூண், மாணிக்கம் தாகூர், ராஜசேகரன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் கோவிந்தராஜன், சுந்தர் ராஜன், ரவிச்சந்திரன், தெய்வநாயகம், தேவராஜன், செல்வராஜ் பாண்டியன், எல்.முருகேசன், மதுரை பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.தங்க ராமன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:–
இந்த நாட்டுக்காக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்கள் உயிரை தியாகம் செய்தனர். உயிர் தியாகம் செய்து அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டை காக்கும் பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இன்று ஜனநாயகத்துக்கு சவால் விடும் வகையில் மோடி மஸ்தான் ஆட்சி நடக்கிறது. மோடி சர்வாதிகாரியாக வர துடிக்கிறார். காங்கிரசை ஓழித்து விட்டோம். ஆட்சியை பிடித்து விட்டோம் என்று அவர் நினைக்கிறார். மாநில கட்சிகளையும் ஒடுக்க துடிக்கிறார் மோடியின் இந்த கனவு பலிக்காது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை கொண்டு வந்து அதனை திருப்பி தருவோம் என்று ஆசை காட்டி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இப்போது ஏதாவது நடக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம் எங்கே போனது என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் திட்டத்தையே மீண்டும் கொண்டு வந்து மோடி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.
தமிழகத்தில் பன்னீர் செல்வத்தின் அரசு செயல்படாத அரசாக உள்ளது.
வாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னை ராகுல்காந்திக்கு நிகராக நினைத்து வருகிறார். அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தான் எடுத்த முடிவு தவறானது என அவர் விரைவிலேயே உணர்வார். வருகிற 28–ந் தேதி அவர் கூறியபடி புதிய கட்சியின் கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி நடந்தாலும் 2016 வரை அவரது புது இயக்கம் தாக்குபிடிக்குமா என்பது தெரியவில்லை. காங்கிரஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. வாசன் வெளியேறியதால் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment