Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கவும், எதிர் கால குடிநீர் தேவையை கருத் தில் கொண்டும் ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி புரம், ஜெயமங்கலம் பகுதி களில் தாய் திட்டத்தின் கீழ் தார்ச்சாலைகள் அமைத் தல், குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவர் அமைத்தல், சிறு மின் விசை பம்பு அமைத் தல், தெருவிளக்குகள் அமைத் தல் போன்ற பணிகளும், பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் பணி களும் நடந்து வருகின்றன.

இந்த வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.மீனாட்சி புரம் முதல் லட்சுமிபுரம் வரை ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். லட்சுமி புரத்தில் குடிநீர் கிணற்றுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு உள்ள தையும், குடியிருப்பு விரிவாக் கம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட் டார்.

பின்னர் லட்சுமிபுரம், ஜெய மங்கலம் பகுதிகளில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட் டப்படும் வீடுகளை பார் வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தர விட் டார். அதனை தொடர்ந்து வைகை அணை பகுதியில் நடந்து வரும் தேனி அல்லி நகரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி களை கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட் டார்.

புதிய குடிநீர் திட்டம்

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார் பிலும் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி நகரின் குடிநீர் தேவைக்காக வைகை அணை யில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தேனி அல்லி நகரம் நகராட்சி யில் தற்போது சுமார் 95 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த புதிய குடிநீர் திட்ட மானது 2045-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தொடங் கப்பட்டு உள்ளது. இதற்காக தேனி நகரில் 4 இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட் டிகள் அமைக்கப் படு கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும்.

இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊரக வளர்ச் சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) ராஜாராம், பெரியகுளம் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் நாகரத்தினம், ஜீவரத்தினம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

0 comments: