Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சின்னமனூர் அருகே கத்தியால் குத்தி கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய் துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள துரைச் சாமிபுரத்தை சேர்ந்த பெரிய சாமிதேவர் என்பவ ருடைய மகன் பாண்டியன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த காட்டு ராஜா என்பவருடைய மனைவி பாக்கியம் (45) என்ப வருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.

இந்த தொடர்பு குறித்து அறிந்ததும் பாக்கியத் தின் குடும்பத்திற்கு தெரியவந் துள்ளது. இதனால் பாக்கியத் தின் மகன் மணி, மகள் பிரேமா, மருமகன் விஜயன் (28) ஆகிய 3 பேரும் நேற்று காலை பாண்டியனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ள னர். 3 பேரும் சேர்ந்து பாண்டி யனை தாக்கியுள்ளனர்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது விஜயன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பாண்டியனின் அடிவயிற்றில் குத்தினார். தொடர்ந்து 2 பேரும் சண்டை போட்டதால் பாண்டியனும், விஜயனும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ள னர். இந்த நிலையில் பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த விஜயன் சின்ன மனூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு உள் ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியனின் மகள் மலர் மணி (27) சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மணி, பிரேமா, விஜயன், பாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணி, பிரேமா, பாக்கி யம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப் பட்ட பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த சம்பவம் சின்ன மனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: