Thursday, September 18, 2014
தேவாரம் அருகே நியூட் ரினோ ஆய்வு மையத்திற்கு சாலை அமைக்கும் பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொறியாளர் குழு ஆய்வு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொறியாளர் குழு ஆய்வு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment