Thursday, September 18, 2014
தேவாரம் அருகே நியூட் ரினோ ஆய்வு மையத்திற்கு சாலை அமைக்கும் பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொறியாளர் குழு ஆய்வு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொறியாளர் குழு ஆய்வு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
0 comments:
Post a Comment