Friday, November 21, 2014
மதுரை முத்துராமலிங்கத்தேவர்
தெரு மார்க்கெட்டில்(20வது ரோடு) போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தை தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் ஏலம் போகாத இனங்களின் நிலையை துாசி தட்ட
உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறை, மார்க்கெட், பார்க்கிங் உள்ளிட்ட வருவாய் கொழிக்கும் முக்கிய இனங்கள் டெண்டர் மூலம் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படுகிறது. செலவினங்கள் கொண்ட இனங்களை மட்டுமே மாநகராட்சி பராமரித்து வருகிறது.
டெண்டர் போகாதவை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள இனங்களை அந்தந்த பகுதியில் பில் கலெக்டர்கள் கட்டணம் வசூலித்து மாநகராட்சியிடம் வழங்க வேண்டும். மாநகராட்சியின் சொத்து மதிப்பு என்ன என்பது புதிராக இருப்பதைப் போல் ஏலம் போகாத இனங்களின் நிலையும் புதிராக
இருந்தது.
சில நாட்களுக்கு முன் முத்துராமலிங்கத் தேவர் தெரு ரோடு ஆய்வுக்குச் சென்ற கமிஷனர் கதிரவன் அங்குள்ள மார்க்கெட் கடைகளிடம் ரூ.௩௦
கட்டணம் வசூலிப்பதை அறிந்தார். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.௧௦ என்பது தெரியவந்தது.
பில் கலெக்டருக்கு பதிலாக மாற்றுப் பணியில் சென்ற அலுவலக காவலர் முருகன் என்பவர் போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்து
விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு தான் ஏலம் போகாத இனங்கள் பற்றிய சிந்தனை தோன்றியது.
அனைத்து உதவி கமிஷனர்களையும் அழைத்த கமிஷனர் மண்டல வாரியாக ஏலம் போகாத இனங்களின்
முழு விபரங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதுவரை
ஏல இனங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த உதவி
கமிஷனர்கள் தற்போது வருவாய் பிரிவினரை அழைத்து ஆவணங்களை துாசி தட்டி வருகின்றனர்.
முழு பட்டியல் கிடைத்த பின் முத்துராமலிங்கத் தேவர் தெரு மார்க்கெட் போலி பில் விவகாரம் போல மேலும் பல 'குட்டு' வெளியாக வாய்ப்புள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment