Friday, November 21, 2014
மதுரை முத்துராமலிங்கத்தேவர்
தெரு மார்க்கெட்டில்(20வது ரோடு) போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தை தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் ஏலம் போகாத இனங்களின் நிலையை துாசி தட்ட
உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறை, மார்க்கெட், பார்க்கிங் உள்ளிட்ட வருவாய் கொழிக்கும் முக்கிய இனங்கள் டெண்டர் மூலம் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படுகிறது. செலவினங்கள் கொண்ட இனங்களை மட்டுமே மாநகராட்சி பராமரித்து வருகிறது.
டெண்டர் போகாதவை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள இனங்களை அந்தந்த பகுதியில் பில் கலெக்டர்கள் கட்டணம் வசூலித்து மாநகராட்சியிடம் வழங்க வேண்டும். மாநகராட்சியின் சொத்து மதிப்பு என்ன என்பது புதிராக இருப்பதைப் போல் ஏலம் போகாத இனங்களின் நிலையும் புதிராக
இருந்தது.
சில நாட்களுக்கு முன் முத்துராமலிங்கத் தேவர் தெரு ரோடு ஆய்வுக்குச் சென்ற கமிஷனர் கதிரவன் அங்குள்ள மார்க்கெட் கடைகளிடம் ரூ.௩௦
கட்டணம் வசூலிப்பதை அறிந்தார். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.௧௦ என்பது தெரியவந்தது.
பில் கலெக்டருக்கு பதிலாக மாற்றுப் பணியில் சென்ற அலுவலக காவலர் முருகன் என்பவர் போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்து
விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு தான் ஏலம் போகாத இனங்கள் பற்றிய சிந்தனை தோன்றியது.
அனைத்து உதவி கமிஷனர்களையும் அழைத்த கமிஷனர் மண்டல வாரியாக ஏலம் போகாத இனங்களின்
முழு விபரங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதுவரை
ஏல இனங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த உதவி
கமிஷனர்கள் தற்போது வருவாய் பிரிவினரை அழைத்து ஆவணங்களை துாசி தட்டி வருகின்றனர்.
முழு பட்டியல் கிடைத்த பின் முத்துராமலிங்கத் தேவர் தெரு மார்க்கெட் போலி பில் விவகாரம் போல மேலும் பல 'குட்டு' வெளியாக வாய்ப்புள்ளது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மணப்பாறை அருகே வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் சப் கலெக்டர் நேரில் விசாரணை. திருச்சி மாவட்டம், மண...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
0 comments:
Post a Comment