Friday, November 21, 2014
மதுரை முத்துராமலிங்கத்தேவர்
தெரு மார்க்கெட்டில்(20வது ரோடு) போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தை தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் ஏலம் போகாத இனங்களின் நிலையை துாசி தட்ட
உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறை, மார்க்கெட், பார்க்கிங் உள்ளிட்ட வருவாய் கொழிக்கும் முக்கிய இனங்கள் டெண்டர் மூலம் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படுகிறது. செலவினங்கள் கொண்ட இனங்களை மட்டுமே மாநகராட்சி பராமரித்து வருகிறது.
டெண்டர் போகாதவை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள இனங்களை அந்தந்த பகுதியில் பில் கலெக்டர்கள் கட்டணம் வசூலித்து மாநகராட்சியிடம் வழங்க வேண்டும். மாநகராட்சியின் சொத்து மதிப்பு என்ன என்பது புதிராக இருப்பதைப் போல் ஏலம் போகாத இனங்களின் நிலையும் புதிராக
இருந்தது.
சில நாட்களுக்கு முன் முத்துராமலிங்கத் தேவர் தெரு ரோடு ஆய்வுக்குச் சென்ற கமிஷனர் கதிரவன் அங்குள்ள மார்க்கெட் கடைகளிடம் ரூ.௩௦
கட்டணம் வசூலிப்பதை அறிந்தார். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.௧௦ என்பது தெரியவந்தது.
பில் கலெக்டருக்கு பதிலாக மாற்றுப் பணியில் சென்ற அலுவலக காவலர் முருகன் என்பவர் போலி பில் மூலம் கூடுதல் கட்டணம் வசூலித்து
விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு தான் ஏலம் போகாத இனங்கள் பற்றிய சிந்தனை தோன்றியது.
அனைத்து உதவி கமிஷனர்களையும் அழைத்த கமிஷனர் மண்டல வாரியாக ஏலம் போகாத இனங்களின்
முழு விபரங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதுவரை
ஏல இனங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த உதவி
கமிஷனர்கள் தற்போது வருவாய் பிரிவினரை அழைத்து ஆவணங்களை துாசி தட்டி வருகின்றனர்.
முழு பட்டியல் கிடைத்த பின் முத்துராமலிங்கத் தேவர் தெரு மார்க்கெட் போலி பில் விவகாரம் போல மேலும் பல 'குட்டு' வெளியாக வாய்ப்புள்ளது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment