Friday, November 21, 2014
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட
குழந்தையைக் கண்டுபிடித்து ஒப்படைக்க, சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம் வழங்கி
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment