Friday, November 21, 2014
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட
குழந்தையைக் கண்டுபிடித்து ஒப்படைக்க, சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம் வழங்கி
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment