Friday, November 21, 2014
மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநில தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினருமான குழந்தை வேலு–தனலட்சுமி ஆகியோரது மகன் செந்தில் முருகனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன்–வசந்தி ஆகியோரது மகள் தேன்மொழிக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று திருமணம் நடந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் நடக்கும் போது முன்பெல்லாம் ஆச்சரியப்படுவதும், கேலி–கிண்டல் செய்வதும் உண்டு. விமர்சனங்கள் வருவதும் உண்டு. ஆனால் இன்று ஆச்சரியப்படுவது கிடையாது.
வைதீகமுறைப்படி திருமணம் நடந்தால்தான் அதைப்பார்த்து, ஆச்சரியப்படும் நிலை உள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்தான்.
இவர்களால் தான் சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் கொடிகட்டிப்பறக்கின்றன.
இந்த திருமணம், அழகு தமிழ்மொழியில் நடந்த திருமணமாகும். தாய் மொழிக்கு கலைஞர் பெற்றுத்தந்த செம்மொழியால் நடைபெற்ற திருமணமாகும்.
நானும், குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, நான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம் இங்கு எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
குழந்தைவேலுவை போல மணமகளின் தந்தை கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜனும், கழகத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment