Friday, November 21, 2014

மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநில தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினருமான குழந்தை வேலு–தனலட்சுமி ஆகியோரது மகன் செந்தில் முருகனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன்–வசந்தி ஆகியோரது மகள் தேன்மொழிக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று திருமணம் நடந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் நடக்கும் போது முன்பெல்லாம் ஆச்சரியப்படுவதும், கேலி–கிண்டல் செய்வதும் உண்டு. விமர்சனங்கள் வருவதும் உண்டு. ஆனால் இன்று ஆச்சரியப்படுவது கிடையாது.
வைதீகமுறைப்படி திருமணம் நடந்தால்தான் அதைப்பார்த்து, ஆச்சரியப்படும் நிலை உள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்தான்.
இவர்களால் தான் சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் கொடிகட்டிப்பறக்கின்றன.
இந்த திருமணம், அழகு தமிழ்மொழியில் நடந்த திருமணமாகும். தாய் மொழிக்கு கலைஞர் பெற்றுத்தந்த செம்மொழியால் நடைபெற்ற திருமணமாகும்.
நானும், குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, நான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம் இங்கு எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
குழந்தைவேலுவை போல மணமகளின் தந்தை கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜனும், கழகத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment