Friday, November 21, 2014

மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநில தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினருமான குழந்தை வேலு–தனலட்சுமி ஆகியோரது மகன் செந்தில் முருகனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன்–வசந்தி ஆகியோரது மகள் தேன்மொழிக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று திருமணம் நடந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் நடக்கும் போது முன்பெல்லாம் ஆச்சரியப்படுவதும், கேலி–கிண்டல் செய்வதும் உண்டு. விமர்சனங்கள் வருவதும் உண்டு. ஆனால் இன்று ஆச்சரியப்படுவது கிடையாது.
வைதீகமுறைப்படி திருமணம் நடந்தால்தான் அதைப்பார்த்து, ஆச்சரியப்படும் நிலை உள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்தான்.
இவர்களால் தான் சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் கொடிகட்டிப்பறக்கின்றன.
இந்த திருமணம், அழகு தமிழ்மொழியில் நடந்த திருமணமாகும். தாய் மொழிக்கு கலைஞர் பெற்றுத்தந்த செம்மொழியால் நடைபெற்ற திருமணமாகும்.
நானும், குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, நான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம் இங்கு எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
குழந்தைவேலுவை போல மணமகளின் தந்தை கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜனும், கழகத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment