Friday, November 21, 2014
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் தை பொங்கல் திருநாளை
யொட்டி பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாரம்பரிய வழக்கப்படி தொன்றுதொட்டு
கடந்த ஆண்டு வரை நடந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக விலங்குகள் நல
வாரியத்தின் மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கின் கீழ் ஜல்லிக்கட்டு காளைகள்
சித்ரவதை செய்யப்படுவதாக கூறி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இடைக்கால தடை இருந்த போதிலும் சிறப்பு அனுமதி பெற்றே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாநில அரசு தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் உரிய பாதுகாப்போடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள காளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய–மாநில அரசுகள் இதில் தலையிட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தளர்த்தி உரிய பாதுகாப்போடு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு சார்பிலும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையொட்டி பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜன் இதுபற்றி கூறியதாவது:–
தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகளவில் வெளிப்படுத்தியது. அலங்காநல்லூரில் கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவாகும். இதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இடைக்கால தடை இருந்தபோதிலும் அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்போடு உயிரிழப்புகள் இன்றி ஒரு வீர விளையாட்டாகவே நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து தலையிட்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு உரிய அனுமதி முன்னதாகவே பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment