Friday, November 21, 2014
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் தை பொங்கல் திருநாளை
யொட்டி பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாரம்பரிய வழக்கப்படி தொன்றுதொட்டு
கடந்த ஆண்டு வரை நடந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக விலங்குகள் நல
வாரியத்தின் மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கின் கீழ் ஜல்லிக்கட்டு காளைகள்
சித்ரவதை செய்யப்படுவதாக கூறி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இடைக்கால தடை இருந்த போதிலும் சிறப்பு அனுமதி பெற்றே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாநில அரசு தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் உரிய பாதுகாப்போடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள காளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய–மாநில அரசுகள் இதில் தலையிட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தளர்த்தி உரிய பாதுகாப்போடு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு சார்பிலும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையொட்டி பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜன் இதுபற்றி கூறியதாவது:–
தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகளவில் வெளிப்படுத்தியது. அலங்காநல்லூரில் கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவாகும். இதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இடைக்கால தடை இருந்தபோதிலும் அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்போடு உயிரிழப்புகள் இன்றி ஒரு வீர விளையாட்டாகவே நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து தலையிட்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு உரிய அனுமதி முன்னதாகவே பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment