Friday, November 21, 2014
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் தை பொங்கல் திருநாளை
யொட்டி பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாரம்பரிய வழக்கப்படி தொன்றுதொட்டு
கடந்த ஆண்டு வரை நடந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக விலங்குகள் நல
வாரியத்தின் மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கின் கீழ் ஜல்லிக்கட்டு காளைகள்
சித்ரவதை செய்யப்படுவதாக கூறி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இடைக்கால தடை இருந்த போதிலும் சிறப்பு அனுமதி பெற்றே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாநில அரசு தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் உரிய பாதுகாப்போடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள காளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய–மாநில அரசுகள் இதில் தலையிட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தளர்த்தி உரிய பாதுகாப்போடு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு சார்பிலும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையொட்டி பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜன் இதுபற்றி கூறியதாவது:–
தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகளவில் வெளிப்படுத்தியது. அலங்காநல்லூரில் கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவாகும். இதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இடைக்கால தடை இருந்தபோதிலும் அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்போடு உயிரிழப்புகள் இன்றி ஒரு வீர விளையாட்டாகவே நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து தலையிட்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு உரிய அனுமதி முன்னதாகவே பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment