Friday, November 14, 2014
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித்தலை அபாய நிலையில் இருந்த வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ் ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
குளித்தலை- மணப்பாறை செல்லும் சாலையில் வை.புதூர் அருகே உள்ளது இரட்டை வாய்க்கால். இந்த வாய்க்காலுக்கு மாயனூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மிகவும் குறுகிய அளவில் உள்ள இந்த பாலம் இவ்வழியாகத்தான் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் சரக்கு வாகனங்கள் திருச்சி செல்லாமல் பெரம்பலூரில் இருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக துவரங்குறிச்சி சென்று மதுரை சாலையில் இணைகிறது. இதனால் 50 கிமீ குறையும். இதனால் குளித் தலை வழியாக தினமும் ஏரா ள மான சரக்கு லாரிகள், கார்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.மேலும் குளித்தலையில் இருந்து தோகைமலை, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, கடவூர், தரகம்பட்டி வரை அரசு மற் றும் தனியார் பஸ்கள் ஏரா ளமாக செல்கின்றன.மேலும் குளித்தலை முசிறியில் இருந் து அய்யர்மலை, பஞ்சப்ப ட்டி, வளையப்பட்டி, கள் ளை, தோகைமலை, திருமகவுண்டனூர், கொசூர் ஆகிய ஊர்களுக்கு டவுன்பஸ்களும்,தனியார் பள்ளி வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றன.
இந்நிலையில் இந்த பால கைப்பிடிச் சுவர்கள் இடிந்து விழுந்து கம்பிகளும் சேதமடைந்தன. இதனால் பாதுகாப்பின்றி எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் இரும்புக்கம்பிகள் அமைத்து சீரமைத்து ள்ளனர். இந்நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment