Friday, November 14, 2014
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித்தலை அபாய நிலையில் இருந்த வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ் ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
குளித்தலை- மணப்பாறை செல்லும் சாலையில் வை.புதூர் அருகே உள்ளது இரட்டை வாய்க்கால். இந்த வாய்க்காலுக்கு மாயனூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மிகவும் குறுகிய அளவில் உள்ள இந்த பாலம் இவ்வழியாகத்தான் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் சரக்கு வாகனங்கள் திருச்சி செல்லாமல் பெரம்பலூரில் இருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக துவரங்குறிச்சி சென்று மதுரை சாலையில் இணைகிறது. இதனால் 50 கிமீ குறையும். இதனால் குளித் தலை வழியாக தினமும் ஏரா ள மான சரக்கு லாரிகள், கார்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.மேலும் குளித்தலையில் இருந்து தோகைமலை, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, கடவூர், தரகம்பட்டி வரை அரசு மற் றும் தனியார் பஸ்கள் ஏரா ளமாக செல்கின்றன.மேலும் குளித்தலை முசிறியில் இருந் து அய்யர்மலை, பஞ்சப்ப ட்டி, வளையப்பட்டி, கள் ளை, தோகைமலை, திருமகவுண்டனூர், கொசூர் ஆகிய ஊர்களுக்கு டவுன்பஸ்களும்,தனியார் பள்ளி வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றன.
இந்நிலையில் இந்த பால கைப்பிடிச் சுவர்கள் இடிந்து விழுந்து கம்பிகளும் சேதமடைந்தன. இதனால் பாதுகாப்பின்றி எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் இரும்புக்கம்பிகள் அமைத்து சீரமைத்து ள்ளனர். இந்நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment