Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
தவளை தன் வாயால் கெடும் அதிர்ச்சியில் ELFIN சகோதரர்கள்
தொடர்ச்சியாக காவல்துறைக்கு எதிராக ஆடியோ வெளியிட்டதால் இவர்களுடைய பல பழைய வழக்குகளை காவல்துறை அதிகாரிகள் தூசு தட்டுகிறார்கள்

( RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள்  ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )

இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுகின்றன


ஆனால் இவர்கள் எதையும் பற்றிக் கவலைப்பட வில்லை ஏனென்றால் தங்களுடைய பினாமியாக ராஜப்பா

தலைமையில் 60 நபர்களை நியமித்து தங்கள் கொள்ளை அடித்த பணம் அனைத்தும் தாங்கள் பிரித்து கொடுத்துள்ளதாகவும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சப் போவதில்லை  மத்திய புலனாய்வுத்துறை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தங்களுடைய வட்டாரங்களுக்கு எல்பின் சகோதரர்கள் தைரியம் அளித்து உள்ளனர்.


காவல் துறைக்கு இறுதி எச்சரிக்கை தரும் எல்பின் ராஜா.

திருச்சி மன்னார்புரம் அருகே தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் போலி நிறுவனம் தான் எல்பின் . இந்நிறுவனத்தின் சார்பில் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் SRK (எ) ரமேஷ் குமார் தலைமையில் சுமார் 800 பேர் துபாய் இன்பச் சுற்றுலா என கூறி சென்று உள்ளனர். அங்குள்ள உயரமான கட்டிடத்தில் வரும் 6-ஆம் தேதி அழகர்சாமி ( எ ) ராஜா சிறப்புரையாற்றி சிறப்பாக செயலாற்றிய அந்த 800 பேருக்கும் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்க நாணயம், செயின், மோதிரம் போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் தர உள்ளாராம். இந்த அண்ணன் தம்பி இருவர் மீதும் பல மாவட்டங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவர்களது பாஸ்போர்ட்கள் இன்னும் அரசு முடக்காதது வியப்பாக இருக்கிறது. மொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்டு விஜய் மல்லையா போல் இவர்களும் ஒருநாள் வெளிநாடு ஓடுவதற்கு வசதியாக இன்னும் பாஸ்போர்ட்களை  நமது அரசு முடக்க வில்லை போல் தெரிகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை இந்தியாவிலிருந்து வெளிநாடு கொண்டு சென்றார்களா ? அல்லது பல கோடி ரூபாய் பணத்தை துபாய் எடுத்துச் சென்று அங்கு தங்கங்களை வாங்கினார்களா ?


 நேற்று  வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்  அனுப்பி உள்ளார். இதில் காவல்துறையை எச்சரிக்கும் வண்ணம் பேசியுள்ளார். அதில் தஞ்சையில் கைது செய்த இருவரையும் நாம் ஜாமீனில் வெளியே எடுத்து விட்டோம்.

 தற்போது  சத்யபிரியா வெளிநாட்டிற்கு பயணம் செய்யப்போவதாக தகவல்


ஆனால் தொடர்ந்து காவல்துறையினர் என்னையும்(ராஜா) ரமேஷையும் பொய் வழக்கில் கைது செய்ய பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்கவே நடக்காது. தற்போது பல டீம் லீடர் களிம்  சென்று எங்கள்மீது  பொய் புகார் தருமாறு மிரட்டி வருகிறார்கள் . நீங்கள் யாரும் பயப்படாதீர்கள் காவல்துறையால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. தங்களைத் தேடி யாராவது காவல்துறையினர் தங்களை சந்திக்க மப்டியில் வந்தால்கூட போட்டோ மற்றும்  வீடியோ எடுங்கள். போனில் அழைத்தால் கால் ரெக்கார்ட் செய்யுங்கள். நம் மீது பொய் வழக்கு பதிவு செய்தால் காவல்துறையினர் அதற்கான பதிலை சொல்லியே ஆகவேண்டும். யாரும் கவலைப்பட வேண்டாம் எல்பின் குடும்பத்தினரை காவல்துறையினரால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து எல்பின் ராஜா காவல்துறையினரே எச்சரிக்கும் வகையில் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை காவல்துறையினர் அனைவரும் பணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள் என நினைத்தாரா என தெரியவில்லை. மற்ற மாவட்டங்களில்  துரித நடவடிக்கை இல்லை என்றாலும்  தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை..

0 comments: