Wednesday, January 13, 2021
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர்
திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவரது தாலியை மறந்து சென்ற நிலையில் சமயபுரம் போலீஸார் தாலி மற்றும் தங்க செயின் என 23 பவுன் நகையினை மீட்டு பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலஜா. இவர் அங்கு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு குடும்பத்துடன் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பெங்களூரு சென்றுள்ளார். சேலம் அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க சங்கிலி என 23 பவுன் நகைகளை காணாது திடுக்கிட்டார். இது குறித்து தொலைபேசி மூலம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
சமயபுரத்தில் அவர் எங்கெங்கு சென்றார் என்று கேட்டறிந்த போலீசார், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை நடத்தினர். அப்போது அவரின் 20 பவுன் தாலி செயின், மற்றுமொரு 3 பவுன் தங்க சங்கிலியும் அங்கிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அவர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு வந்த உடன், கவுன்சிலர் சைலஜாவின் நகைகள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் ,23 பவுன் நகையை பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையினை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment