Thursday, March 05, 2020

On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா, 1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.

திருச்சி புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா சிறப்பு வாய்ந்தது, இந்த ஆண்டு மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.


நேற்று ஓலை பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் இன்று காலை புத்தூர் மந்தையில் கோலாகலமாக  துவங்கியது.
ஓலை சப்பரத்தில் அம்மன் புத்தூர் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது, இதைத்தொடர்ந்து குட்டிக்குடி துவங்கியது முதல் மரியாதையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது, கழுத்தைக் கடித்து ரத்தத்தை மருளாளி சிவக்குமார் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார், இதில் சுமார் 1500 கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: