Thursday, March 05, 2020

On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
இன்பச் சுற்றுலாவில்  கைதானவர்கள். ஜாமீனில்  வந்தாலும் ஜாமீன் ரத்து செய்தாலும் கவலையில்லை.

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி வரும் நிறுவனம் எல்பின்.
இந்நிறுவனத்தின் சார்பில் கடந்த மாதம் தஞ்சாவூரில் பிரசன்னா வெங்கடேஷ் என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனுமதியில்லாத இக்கூட்டத்தை தஞ்சை போலீசார் தடுத்து நிறுத்தி கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார், கிங்ஸ்லி சில நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். காவல்துறை  இருவரையும் கைது செய்தது.



பல நாட்களாக சிறையில் இருந்த இருவரையும் எல்பின் சகோதரர்கள் ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் பல கோடி ரூபாய் பணம் கட்டி ஜாமீனில் வெளியே எடுத்தனர். இவர்களுடன் சத்யபிரியா என்ற பெண்மணி தேடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அழகர்சாமி என்கிற ராஜா எஸ்ஆர்கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் ஆகியோர் துபாயில்  இருந்துகொண்டே அழகர்சாமி என்கிற ராஜா தமிழக காவல்துறையே  வியக்கும் வகைபில் தஞ்சை காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் ஆடியோ வெளியிட்டிருந்தார்

இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் என கூறி 800க்கும் மேற்பட்டோர் துபாய்க்கு  இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பல நூறு பவுன் வரை பரிசளிக்க உள்ளனர் எல்பின்  நிறுவனர்கள்  அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜாமினில் வெளிவந்துள்ள பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் இவர்களுடன் இன்பச்சுற்றுலா துபாய் சென்றுள்ளனர்


இப்படி சென்றதற்கு  முறையாக நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றார்களா ? அல்லது எந்த அனுமதி பெறாமல் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் தெரியாமல்  அறிவிக்காமல் துபாய் சென்று உள்ளார்களா அவர்களது பாஸ்போர்ட்டில் சென்றார்களா அல்லது போலி பாஸ்போர்ட்டில் சென்றார்களா என தெரியவில்லை. முறைப்படி அனுமதி வாங்காமல் எப்படி ஜாமினில் வெளியில் வந்தவர்கள் வெளிநாடு உடனடியாக எப்படி சென்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?
இப்படி பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் வகையில் உள்ளது. இதற்கு மத்திய புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறை தான் உடனடி ஆக்சன் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது

0 comments: