Friday, July 18, 2014

ஈரோடு 57–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபு. இவரது தம்பி பாலாஜி.இவர் ஈரோடு மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவராக உள்ளார். இவர்கள் ஆர்.கே.வி. ரோட்டில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடை முன்பு பூக்கடையும் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.
இதற்கு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான பி.பி.கே.பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் கவுன்சிலர் பிரபுவின் தம்பி முரளிதரன் படுகாயம் அடைந்தார். மற்றும் பி.பி.கே பழனிச்சாமி தரப்பில் அவரது மகன் பி.பி.கே.மணிகண்டன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதலில் பிரபு வுக்கு சொந்தமான ஒட்டலின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்தினால் கடைவீதி பகுதியில் நேற்று சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment