Friday, July 18, 2014

ஈரோடு 57–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபு. இவரது தம்பி பாலாஜி.இவர் ஈரோடு மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவராக உள்ளார். இவர்கள் ஆர்.கே.வி. ரோட்டில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடை முன்பு பூக்கடையும் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.
இதற்கு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான பி.பி.கே.பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் கவுன்சிலர் பிரபுவின் தம்பி முரளிதரன் படுகாயம் அடைந்தார். மற்றும் பி.பி.கே பழனிச்சாமி தரப்பில் அவரது மகன் பி.பி.கே.மணிகண்டன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதலில் பிரபு வுக்கு சொந்தமான ஒட்டலின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்தினால் கடைவீதி பகுதியில் நேற்று சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment