Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by Anonymous in , , ,    
கல்லூரி மாணவியை கடத்தி கட்டாய திருமணம்: 2 பேர் கைது

ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கல்லூரி விடுதியில் படித்து வந்த என்னை வடிவேல் மற்றும் சிலர் எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்து வந்தனர்.
இதன்பிறகு அவர்கள் வடிவேலுவுக்கு என்னை கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர். இவ்வாறு கூறி உள்ளார்.
இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
இது பற்றி இன்ஸ்பெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தினார்.
இதை தொடந்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையொட்டி வடிவேல் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக அங்கமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அங்கமுத்து ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீபிரியாவின் கணவர் ஆவார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

0 comments: