Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by Anonymous in , , ,    
ஈரோட்டில் பூக்கடையில் சுருண்டு கிடந்த 7 அடி நீள பாம்பு


ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது.
இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது.
இதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாம்பு கடி தேசிய அமைப்பை சேர்ந்த வன உயிர் பாதுகாப்பு வல்லுனர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சுருண்டு கிடந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் பாம்பை அவர்கள் வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

0 comments: