Friday, July 18, 2014

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள திம்பம் அடர்ந்த வனப்பகுதியாகும்.
நேற்று இரவு வன ஊழியர் கிருஷ்ணன் என்பவரை சிறுத்தை அடித்து கொன்று தின்றது.
திம்பம் சோதனை சாவடி அருகே இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை கண்காணிக்க ஏற்கனவே கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.
இதனால் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், பத்மா ஆகியோரது தலைமையில் 100 வனத்துறையினர் திம்பம் மலைப்பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இவர்கள் சிறுத்தை நடமாடும் கால் தடம் மற்றும் எச்சம் ஆகியவை தென்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்,
இந்த கண்காணிப்பின் போது அங்கு பதுங்கி இருக்கும் சிறுத்தை பாய்ந்து வந்து தாக்காமல் இருக்க வன ஊழியர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
மேலும் திம்பம் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்தகூண்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் எச்சம் உள்ள பகுதியை கண்காணித்து அந்த இடத்தில் கூண்டு வைக்கப்படும் என்ற வனத்துறை அதிகாரிள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment