Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by Anonymous in , , ,    
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு: நடமாட்டத்தை 100 வன ஊழியர்கள் கண்காணிப்பு

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள திம்பம் அடர்ந்த வனப்பகுதியாகும்.
நேற்று இரவு வன ஊழியர் கிருஷ்ணன் என்பவரை சிறுத்தை அடித்து கொன்று தின்றது.
திம்பம் சோதனை சாவடி அருகே இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை கண்காணிக்க ஏற்கனவே கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.
இதனால் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், பத்மா ஆகியோரது தலைமையில் 100 வனத்துறையினர் திம்பம் மலைப்பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இவர்கள் சிறுத்தை நடமாடும் கால் தடம் மற்றும் எச்சம் ஆகியவை தென்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்,
இந்த கண்காணிப்பின் போது அங்கு பதுங்கி இருக்கும் சிறுத்தை பாய்ந்து வந்து தாக்காமல் இருக்க வன ஊழியர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
மேலும் திம்பம் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்தகூண்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் எச்சம் உள்ள பகுதியை கண்காணித்து அந்த இடத்தில் கூண்டு வைக்கப்படும் என்ற வனத்துறை அதிகாரிள் கூறினர்.

0 comments: