Wednesday, December 03, 2014

On Wednesday, December 03, 2014 by farook press in ,    
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் நேற்று இரவு 11.40 மணி அளவில் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது மகனின் படப்பிடிப்புக்காக நான் மலேசியா சென்றேன். படம் வெளியாவது எப்போது என்பது எனக்கு தெரியாது. அதை டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும். நாளை (4–ந்தேதி) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில பங்கேற்பது பற்றி கேட்டதற்கு, தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமை எதுவும் எனக்கு தெரியாது. எல்லாவற்றையும் அறிந்த பின்னர் தான் பதில் அளிக்க முடியும்

0 comments: