Friday, April 17, 2015
ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்தை லேலியாவை பெற்றெடுத்தபோது தலைப்பு செய்தியில் இடம்பிடித்தார். தற்போது ஒன்பது வயதை எட்டியுள்ள லேலியா தனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்று தாயிடம் கூறினார்.

பெற்ற மகள் ஆசைப்படுகிறாளே என நினைத்த அன்னெகிரெக், அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாரானார். இதையடுத்து கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டதால் கர்ப்பமானார். சில மாதங்களுக்கு பின் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அன்னெகிரெக் நான்கு குழந்தைகளை சுமப்பது தெரிந்தது. இதனால் மருத்துவர்களும், அன்னெகிரெக்கும் ஆச்சர்யம் அடைந்தனர். எனினும் 13 குழந்தைகளை பெற்றெடுத்த தனக்கு 4 குழந்தைகளை சுமப்பது பெரிய விஷயமல்ல என் அன்னெகிரெக் தெரிவித்தார்.
பெரும்பாலும் இவ்வாறு நான்கு குழந்தைகள் கர்ப்பம் தரித்தால், அவை குறை பிரசவத்தில் பிறக்க நேரிடும். அவ்வாறு பிறக்கும் போது குழந்தைகளின் நுரையீரல்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது வரை நான்கு குழந்தைகளும் எவ்வித பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தனக்கு தம்பி மற்றும் தங்கை பிறக்க உள்ளதை எதிர்பார்த்து 13வது குழந்தையான லேலியா காத்திருக்கிறாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
-
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின...
0 comments:
Post a Comment