Friday, April 17, 2015
ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்தை லேலியாவை பெற்றெடுத்தபோது தலைப்பு செய்தியில் இடம்பிடித்தார். தற்போது ஒன்பது வயதை எட்டியுள்ள லேலியா தனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்று தாயிடம் கூறினார்.
பெற்ற மகள் ஆசைப்படுகிறாளே என நினைத்த அன்னெகிரெக், அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாரானார். இதையடுத்து கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டதால் கர்ப்பமானார். சில மாதங்களுக்கு பின் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அன்னெகிரெக் நான்கு குழந்தைகளை சுமப்பது தெரிந்தது. இதனால் மருத்துவர்களும், அன்னெகிரெக்கும் ஆச்சர்யம் அடைந்தனர். எனினும் 13 குழந்தைகளை பெற்றெடுத்த தனக்கு 4 குழந்தைகளை சுமப்பது பெரிய விஷயமல்ல என் அன்னெகிரெக் தெரிவித்தார்.
பெரும்பாலும் இவ்வாறு நான்கு குழந்தைகள் கர்ப்பம் தரித்தால், அவை குறை பிரசவத்தில் பிறக்க நேரிடும். அவ்வாறு பிறக்கும் போது குழந்தைகளின் நுரையீரல்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது வரை நான்கு குழந்தைகளும் எவ்வித பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தனக்கு தம்பி மற்றும் தங்கை பிறக்க உள்ளதை எதிர்பார்த்து 13வது குழந்தையான லேலியா காத்திருக்கிறாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment