Wednesday, December 21, 2016

திருப்பூர்,
திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக வருகிற நிதியாண்டில் நிதிஒதுக்கீடு கோரி அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர ரிங் ரோட்டில் வளைவுகள் அதிகமாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர சாலைகளில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்ட் மூலம் கோடுகள், மேலும், காலேஜ் ரோடு, கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் 15, வேலம்பாளையம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரம், பூக்கடை வீதி சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திட திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மேலும், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள அவிநாசி சாலையில் வேகத்தடுப்பினை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உள்ள ஊராட்சி சாலைகள் பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு வேகத்தடுப்பான்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
காங்கேயம்–திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. உடுமலை மொடக்குப்பட்டி கிராமம், மொடக்குப்பட்டி பகுதியில் உள்ள மொக்குபாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக போலீஸ், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது
திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக வருகிற நிதியாண்டில் நிதிஒதுக்கீடு கோரி அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர ரிங் ரோட்டில் வளைவுகள் அதிகமாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர சாலைகளில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்ட் மூலம் கோடுகள், மேலும், காலேஜ் ரோடு, கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் 15, வேலம்பாளையம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரம், பூக்கடை வீதி சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திட திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மேலும், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள அவிநாசி சாலையில் வேகத்தடுப்பினை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உள்ள ஊராட்சி சாலைகள் பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு வேகத்தடுப்பான்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
காங்கேயம்–திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. உடுமலை மொடக்குப்பட்டி கிராமம், மொடக்குப்பட்டி பகுதியில் உள்ள மொக்குபாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக போலீஸ், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment