Wednesday, December 21, 2016

திருப்பூர்,
திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக வருகிற நிதியாண்டில் நிதிஒதுக்கீடு கோரி அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர ரிங் ரோட்டில் வளைவுகள் அதிகமாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர சாலைகளில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்ட் மூலம் கோடுகள், மேலும், காலேஜ் ரோடு, கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் 15, வேலம்பாளையம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரம், பூக்கடை வீதி சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திட திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மேலும், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள அவிநாசி சாலையில் வேகத்தடுப்பினை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உள்ள ஊராட்சி சாலைகள் பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு வேகத்தடுப்பான்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
காங்கேயம்–திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. உடுமலை மொடக்குப்பட்டி கிராமம், மொடக்குப்பட்டி பகுதியில் உள்ள மொக்குபாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக போலீஸ், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது
திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக வருகிற நிதியாண்டில் நிதிஒதுக்கீடு கோரி அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர ரிங் ரோட்டில் வளைவுகள் அதிகமாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர சாலைகளில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்ட் மூலம் கோடுகள், மேலும், காலேஜ் ரோடு, கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் 15, வேலம்பாளையம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரம், பூக்கடை வீதி சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திட திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மேலும், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள அவிநாசி சாலையில் வேகத்தடுப்பினை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உள்ள ஊராட்சி சாலைகள் பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு வேகத்தடுப்பான்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
காங்கேயம்–திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. உடுமலை மொடக்குப்பட்டி கிராமம், மொடக்குப்பட்டி பகுதியில் உள்ள மொக்குபாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக போலீஸ், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment