Wednesday, December 21, 2016

திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமாக வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வைப் மெஷின்’திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலம் வரி செலுத்தலாம் என்று கடந்த 15–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.18½ கோடி வரி வசூலானது.
ஏ.டி.எம். எந்திரங்களில் நபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்தை மட்டுமே ஒருநாள் எடுக்க முடியும். அதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்வைப் மெஷின்’ வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வரிவசூல் மையங்கள்திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம், வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையத்தில் உள்ள 2–வது மண்டல அலுவலகம், நெருப்செரிச்சல், நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகம், முத்தனம்பாளையம், மண்ணரை, ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4–வது மண்டல அலுவலகம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 11 இடங்களில் மாநகராட்சிக்கான வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 11 மையங்களிலும் நேற்று முதல் ‘ஸ்வைப் மெஷின்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாக ‘ஸ்வைப் மெஷினை’ பயன்படுத்தி தங்களுடைய வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ எந்திரத்தின் செயல்பாட்டை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தானநாராயணன், உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி செலுத்த வேண்டும்இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை பணபரிமாற்றம் இல்லாதவகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி உரிய காலத்துக்குள் தங்களின் வரியை செலுத்த வேண்டும்’ என்றார்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமாக வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வைப் மெஷின்’திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலம் வரி செலுத்தலாம் என்று கடந்த 15–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.18½ கோடி வரி வசூலானது.
ஏ.டி.எம். எந்திரங்களில் நபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்தை மட்டுமே ஒருநாள் எடுக்க முடியும். அதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்வைப் மெஷின்’ வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வரிவசூல் மையங்கள்திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம், வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையத்தில் உள்ள 2–வது மண்டல அலுவலகம், நெருப்செரிச்சல், நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகம், முத்தனம்பாளையம், மண்ணரை, ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4–வது மண்டல அலுவலகம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 11 இடங்களில் மாநகராட்சிக்கான வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 11 மையங்களிலும் நேற்று முதல் ‘ஸ்வைப் மெஷின்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாக ‘ஸ்வைப் மெஷினை’ பயன்படுத்தி தங்களுடைய வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ எந்திரத்தின் செயல்பாட்டை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தானநாராயணன், உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி செலுத்த வேண்டும்இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை பணபரிமாற்றம் இல்லாதவகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி உரிய காலத்துக்குள் தங்களின் வரியை செலுத்த வேண்டும்’ என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment