Wednesday, December 21, 2016

திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமாக வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வைப் மெஷின்’திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலம் வரி செலுத்தலாம் என்று கடந்த 15–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.18½ கோடி வரி வசூலானது.
ஏ.டி.எம். எந்திரங்களில் நபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்தை மட்டுமே ஒருநாள் எடுக்க முடியும். அதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்வைப் மெஷின்’ வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வரிவசூல் மையங்கள்திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம், வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையத்தில் உள்ள 2–வது மண்டல அலுவலகம், நெருப்செரிச்சல், நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகம், முத்தனம்பாளையம், மண்ணரை, ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4–வது மண்டல அலுவலகம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 11 இடங்களில் மாநகராட்சிக்கான வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 11 மையங்களிலும் நேற்று முதல் ‘ஸ்வைப் மெஷின்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாக ‘ஸ்வைப் மெஷினை’ பயன்படுத்தி தங்களுடைய வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ எந்திரத்தின் செயல்பாட்டை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தானநாராயணன், உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி செலுத்த வேண்டும்இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை பணபரிமாற்றம் இல்லாதவகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி உரிய காலத்துக்குள் தங்களின் வரியை செலுத்த வேண்டும்’ என்றார்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமாக வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வைப் மெஷின்’திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலம் வரி செலுத்தலாம் என்று கடந்த 15–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.18½ கோடி வரி வசூலானது.
ஏ.டி.எம். எந்திரங்களில் நபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்தை மட்டுமே ஒருநாள் எடுக்க முடியும். அதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்வைப் மெஷின்’ வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வரிவசூல் மையங்கள்திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம், வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையத்தில் உள்ள 2–வது மண்டல அலுவலகம், நெருப்செரிச்சல், நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகம், முத்தனம்பாளையம், மண்ணரை, ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4–வது மண்டல அலுவலகம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 11 இடங்களில் மாநகராட்சிக்கான வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 11 மையங்களிலும் நேற்று முதல் ‘ஸ்வைப் மெஷின்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாக ‘ஸ்வைப் மெஷினை’ பயன்படுத்தி தங்களுடைய வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ எந்திரத்தின் செயல்பாட்டை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தானநாராயணன், உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி செலுத்த வேண்டும்இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை பணபரிமாற்றம் இல்லாதவகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி உரிய காலத்துக்குள் தங்களின் வரியை செலுத்த வேண்டும்’ என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
State Level Seminar on “Emerging Trends In Modern Marketing” Srimad Andavan Arts And Science College (Autono...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
திருச்சி 21.5.17 திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் மண்டல மாநாடு மற்றும் அதில் பாணியாற்றிய பொதுச்செயலாளர் தம...
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது:...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
0 comments:
Post a Comment