Wednesday, December 21, 2016

திருப்பூர்
திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவருடன் சுற்றிய மாணவிகளை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவிகள்திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவருடன் இரு இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்கள். மேலும் அந்த இளம்பெண்கள் தன்னுடைய சகோதரிகள் என்றும், தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உடன் வந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்களுடன் வந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளம்பெண்கள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்றும், அவர்கள் இந்த வாலிபருடன் இரவு நேரத்தில் வாலிபாளையம் பகுதியில் சுற்றியதும் தெரியவந்தது.
பெற்றோருடன் அனுப்பிய போலீசார்இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி கூட்டி சென்றனர். மாணவிகள் கூறிய முகவரிக்கு போலீசார் அவர்களை கூட்டி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னரே மாணவிகள் கூறியது தவறான முகவரி என்று தெரியவந்தது. பின்னர் மாணவிகளிடம் இருந்து பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
பின்னர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோருடன் போலீசார் மாணவிகளை அனுப்பி வைத்தனர். வாலிபரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே பல மாணவிகள் பல்வேறு தவறான பாதைகளில் செல்வதால் பெற்றோர் கவனத்துடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்
திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவருடன் சுற்றிய மாணவிகளை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவிகள்திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவருடன் இரு இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்கள். மேலும் அந்த இளம்பெண்கள் தன்னுடைய சகோதரிகள் என்றும், தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உடன் வந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்களுடன் வந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளம்பெண்கள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்றும், அவர்கள் இந்த வாலிபருடன் இரவு நேரத்தில் வாலிபாளையம் பகுதியில் சுற்றியதும் தெரியவந்தது.
பெற்றோருடன் அனுப்பிய போலீசார்இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி கூட்டி சென்றனர். மாணவிகள் கூறிய முகவரிக்கு போலீசார் அவர்களை கூட்டி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னரே மாணவிகள் கூறியது தவறான முகவரி என்று தெரியவந்தது. பின்னர் மாணவிகளிடம் இருந்து பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
பின்னர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோருடன் போலீசார் மாணவிகளை அனுப்பி வைத்தனர். வாலிபரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே பல மாணவிகள் பல்வேறு தவறான பாதைகளில் செல்வதால் பெற்றோர் கவனத்துடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment