Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts
Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown in india
நமது நாட்டில் தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு, வருவாய், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் ஏற்ற விதத்தில், அன்னிய முதலீடு வரத்து குவிவதை நோக்கமாக கொண்டு, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்த மாற்றங்களை கடந்த ஜூன் மாதம் 20–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள்.
இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதி பெறுவார்கள். விசா நடைமுறை எளிதாக்கப்படும். சொத்துகள் வாங்கவும், குடும்பத்தினர் வேலை பெறவும் அனுமதி தரப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை அளித்தது. சிரமத்தில் உள்ள கட்டுமானத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது.
கொல்கத்தா:
டாட்டா கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விவசாயிகளிடமே ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 'சிங்கூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பிற்காக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் காத்திருந்தோம்.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26 நாட்கள் வரை நான் உண்ணாவிரதம் இருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கூரில் டாட்டா தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த வெற்றி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சிங்கூர் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் இதுநாள்வரை எனக்கு மிச்சமிருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி விட்டதால் இனி நான் நிம்மதியாக இறப்பேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
டாட்டா கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விவசாயிகளிடமே ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 'சிங்கூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பிற்காக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் காத்திருந்தோம்.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26 நாட்கள் வரை நான் உண்ணாவிரதம் இருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கூரில் டாட்டா தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த வெற்றி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சிங்கூர் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் இதுநாள்வரை எனக்கு மிச்சமிருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி விட்டதால் இனி நான் நிம்மதியாக இறப்பேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
Thursday, January 22, 2015
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பெட்ரோல் விலையை விட விமானத்துக்கான எரிபொருள் (ஏடிஎப் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல்) விலை குறைந்துள்ளது.
சாதாரண பெட்ரோலுக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு அதிகரித்ததே விலை உயர்வுக்குக் காரணமாகும்.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.58.91 ஆக உள்ளது. அதேசமயம் விமான எரிபொருள் விலை ஒரு லிட்டர் ரூ.52.42 ஆகும்.
விமானங்களுக்கான பெட்ரோல் அதிகம் சுத்திகரிக்கப் பட்டதாகும். பொதுவாக சாதாரண அதாவது கார், மோட்டார் சைக்கிள்களுக்கான பெட்ரோல் விலையைக் காட்டிலும் விமான எரிபொருள் விலை அதிகமாக இருக்கும்.
ஆனால் இப்போதுதான் முதல் முறையாக சாதாரண ரக பெட்ரோல் மீது அதிகபட்ச உற்பத்தி வரி விதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் 4 முறை பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியது. மொத்தம் ஒரு லிட்டருக்கு ரூ.7.75 உயர்த்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக உற்பத்தி வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.16.95 ஆக உள்ளது.
ஏப்ரல் 2002-ல் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.10.53 ஆக இருந்தது. இது 2005-ம் ஆண்டு ரூ.14.59 ஆக உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டில் வரி அதிகபட்சமாக ரூ.14.78 என்ற நிலையை எட்டியது. பின்னர் 2012-ம் ஆண்டில் ரூ.9.48 ஆகக் குறைக்கப்பட்டது.
2010-ம் ஆண்டில் பெட்ரோல் மீதான கட்டுப்பாடு விலக்கப்பட்டது. இதனால் சர்வதேச விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த தால் கடந்த ஓராண்டில் 9 முறை பெட்ரோல் விலை குறைக்கப் பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு ரூ. 14.69 குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் லிட்டருக்கு ரூ.1.50 உற்பத்தி வரி விதிக் கப்பட்டது. டிசம்பர் 2-ம் தேதி லிட்டருக்கு ரூ.2.25 உயர்த்தப்பட்டது. ஜனவரி 2 மற்றும் ஜனவரி 16-ம் தேதி களில் லிட்டருக்கு தலா ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டது.
பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அரசு உற்பத்தி வரியை உயர்த்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ.94,164 கோடி வருமானம் கிடைத்தது. மொத்த உற்பத்தி வரி வசூலில் இது 52 சதவீதமாகும். உற்பத்தி வரி கூடுதலால் நடப்பு நிதிஆண்டில் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி வரியானது அடிப்படை வரி ரூ.8.95, சிறப்பு உற்பத்தி வரி ரூ.6 மற்றும் கூடுதல் உற்பத்தி வரி ரூ.2 என லிட்டருக்கு வசூலிக்கப்படுகின்றன.
விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 8 சதவீதமாக உள்ளது
Wednesday, September 10, 2014
2005 மகாத்மா காந்தி வரிசையில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இந்த புதிய 10 ரூபாய் நோட்டின் பின்புறம் 2014 என ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் நம்பரிங் பேனலில் ‘எம்’ என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய கீழ், மேல் வரிசை எண்கள் அச்சிடப்படும்.
ஆனால், நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முந்தைய 2005 மகாத்மா காந்தி நோட்டுக்களை போலவேதான் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...


