Wednesday, August 31, 2016
கொல்கத்தா:
டாட்டா கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விவசாயிகளிடமே ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 'சிங்கூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பிற்காக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் காத்திருந்தோம்.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26 நாட்கள் வரை நான் உண்ணாவிரதம் இருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கூரில் டாட்டா தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த வெற்றி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சிங்கூர் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் இதுநாள்வரை எனக்கு மிச்சமிருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி விட்டதால் இனி நான் நிம்மதியாக இறப்பேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
டாட்டா கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விவசாயிகளிடமே ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 'சிங்கூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பிற்காக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் காத்திருந்தோம்.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26 நாட்கள் வரை நான் உண்ணாவிரதம் இருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கூரில் டாட்டா தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த வெற்றி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சிங்கூர் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் இதுநாள்வரை எனக்கு மிச்சமிருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி விட்டதால் இனி நான் நிம்மதியாக இறப்பேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
