Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown in Break
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 18 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பென்ஜமின் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணிக்கு வந்த பின்னர் பள்ளியில் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, நிர்வாகம் சிறப்பாக இருந்தது என்றும் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பென்ஜமின் கடந்த வாரம் மாறுதல் பெற்று சென்றார்.
இது மாணவ-மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் பென்ஜமினை மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பென்ஜமினை தலைமை ஆசிரியராக நியமிக்காவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று கூறி இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளிக்கு முன்பு திரண்டனர். பள்ளியின் கேட்டை பூட்டு போட்டு மூடினர். அவர்களின் போராட்டத்துக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களையும் மாணவ- மாணவிகள் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாணவ-மாணவிகளின் போராட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது..
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...