Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown in Break
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 18 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பென்ஜமின் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணிக்கு வந்த பின்னர் பள்ளியில் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, நிர்வாகம் சிறப்பாக இருந்தது என்றும் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பென்ஜமின் கடந்த வாரம் மாறுதல் பெற்று சென்றார்.
இது மாணவ-மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் பென்ஜமினை மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பென்ஜமினை தலைமை ஆசிரியராக நியமிக்காவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று கூறி இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளிக்கு முன்பு திரண்டனர். பள்ளியின் கேட்டை பூட்டு போட்டு மூடினர். அவர்களின் போராட்டத்துக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களையும் மாணவ- மாணவிகள் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாணவ-மாணவிகளின் போராட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது..
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...