Sunday, September 21, 2014
திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டாக ஓமியோபதி டாக்டர் இல்லாததால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில் ஓமியோபதி பிரிவில் சிறுநீரக கல், பித்தப்பை கல், ஆஸ்துமா, மூட்டு வாதம், தோல் நோய், மூலம், வயிற்றுப்புண், காது, மூக்கு, தொண்டை பாதிப்பு, கர்ப்பப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தினமும் 100–க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓமியோபதி சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இங்கு ஓமியோபதி டாக்டராக இருந்த கிங், கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின், இதுவரை தனியாக டாக்டர் நியமிக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு டாக்டர், வாரத்தில் 2 நாட்கள் திருப்பூர் வந்து சிகிச்சை அளித்து வருகிறார். அவர் வரும் நாட்களில் மட்டுமே, நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில், ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஓமியோபதி சிகிச்சை பிரிவில் உள்ள மருந்தாளுநர்கள், டாக்டர் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரையை மட்டும் வழங்குகின்றனர். புதிதாக ஓமியோபதி சிகிச்சை பெற வரும் நோயாளிகளை டாக்டர் உள்ள நாட்களில் வருமாறு கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அவர்கள் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சையை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வெகுதொலைவில் இருந்து வருபவர்களுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வந்து செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் புதிதாக வரும் நோயாளிகள், டாக்டர் வரும் நாள் தெரியாமல் இங்கு மருத்துவமனை வரை வந்து விட்டு பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே நோயாளிகளின் வீண்அலைச்சலை தவிர்க்கவும், அவர்கள் தேவையான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும் திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் ஓமியோபதி டாக்டர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment