Sunday, September 21, 2014
திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டாக ஓமியோபதி டாக்டர் இல்லாததால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில் ஓமியோபதி பிரிவில் சிறுநீரக கல், பித்தப்பை கல், ஆஸ்துமா, மூட்டு வாதம், தோல் நோய், மூலம், வயிற்றுப்புண், காது, மூக்கு, தொண்டை பாதிப்பு, கர்ப்பப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தினமும் 100–க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓமியோபதி சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இங்கு ஓமியோபதி டாக்டராக இருந்த கிங், கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின், இதுவரை தனியாக டாக்டர் நியமிக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு டாக்டர், வாரத்தில் 2 நாட்கள் திருப்பூர் வந்து சிகிச்சை அளித்து வருகிறார். அவர் வரும் நாட்களில் மட்டுமே, நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில், ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஓமியோபதி சிகிச்சை பிரிவில் உள்ள மருந்தாளுநர்கள், டாக்டர் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரையை மட்டும் வழங்குகின்றனர். புதிதாக ஓமியோபதி சிகிச்சை பெற வரும் நோயாளிகளை டாக்டர் உள்ள நாட்களில் வருமாறு கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அவர்கள் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சையை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வெகுதொலைவில் இருந்து வருபவர்களுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வந்து செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் புதிதாக வரும் நோயாளிகள், டாக்டர் வரும் நாள் தெரியாமல் இங்கு மருத்துவமனை வரை வந்து விட்டு பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே நோயாளிகளின் வீண்அலைச்சலை தவிர்க்கவும், அவர்கள் தேவையான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும் திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் ஓமியோபதி டாக்டர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment