Wednesday, October 08, 2014
பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அவினாசிபாளையத்தில் பேக்கரி மற்றும் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா(வயது 25). இவர் நேற்று மாலை கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் டீ கேட்டுள்ளார். பிரியா டீ போட்டுக்கொண்டிருந்தபோது அந்த மர்ம நபர் திடீரென பிரியாவின் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். அதிர்ச்சியடைந்த பிரியா திருடன், திருடன் என சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அவினாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் குருந்தங்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவரது மகன் அருளாளன்(35) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அருளாளன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment