Wednesday, October 08, 2014
பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அவினாசிபாளையத்தில் பேக்கரி மற்றும் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா(வயது 25). இவர் நேற்று மாலை கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் டீ கேட்டுள்ளார். பிரியா டீ போட்டுக்கொண்டிருந்தபோது அந்த மர்ம நபர் திடீரென பிரியாவின் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். அதிர்ச்சியடைந்த பிரியா திருடன், திருடன் என சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அவினாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் குருந்தங்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவரது மகன் அருளாளன்(35) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அருளாளன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment