Wednesday, October 08, 2014
பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அவினாசிபாளையத்தில் பேக்கரி மற்றும் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா(வயது 25). இவர் நேற்று மாலை கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் டீ கேட்டுள்ளார். பிரியா டீ போட்டுக்கொண்டிருந்தபோது அந்த மர்ம நபர் திடீரென பிரியாவின் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். அதிர்ச்சியடைந்த பிரியா திருடன், திருடன் என சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அவினாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் குருந்தங்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவரது மகன் அருளாளன்(35) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அருளாளன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment