Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களையும் வழிபாடுகளையும் நடத்தி வருகின்றனர். அதன்படி உடுமலையை அடுத்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அடிவாரப்பகுதியில் மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ மணிவாசகம், வி.என்.வெங்கடேஷ், ரகுபதி, பெதப்பம்பட்டி வாசுதேவன், ராசப்பன், ராஜேந்திரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: