Wednesday, July 23, 2014
திருப்பூர், 23: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழங்கிய மனுவில்கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பலர் தங்களது அவசரத் தேவைகளுக்காக தனியார் நடத்தும் அடகு கடைகளில் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment