Saturday, July 19, 2014
வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே டவுண் பஞ்சாயத்து சார்பில் 2009–ல் அமைக்கப்பட்டது. பூங்கா சுமார் ரூ.30 லட்சம் செலவில் நடைமேடை, ஊஞ்சல், செயற்கை நீர்ஊற்று, பூங்கா, நீர் அருவி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
இதனை பராமரிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த பூங்காவில் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாவினர் இங்கு வந்து புகைப்படம் எடுத்தும் அனுபவித்து வந்தனர்.
மேலும் நடைமேடை அமைக்கப்பட்டு இருந்ததால் அனைவரும் நடைபயிற்சி செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இங்கு பணியாற்றிய காவலர் திடீரென்று இறந்து விட்டார். அன்றிலிருந்து பூங்காவினை பராமரிக்கப்படாததால் இங்கு அமைக்கப்பட்டிருந்த பூஞ்செடிகள், புல்வெளிகள் மற்றும் அழகு செடிகள் அனைத்தும் தண்ணீர் ஊற்றப்படாததால் கருகி போய்விட்டது.
செயற்கை நீர்ஊற்று உள்பட அனைத்தும் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதனை சரி செய்து பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் டவுண் பஞ்சாயத்து தலைவரும், மகாத்மாகாந்தி சேவா சங்கத்தின் தலைவர் தவமணி கூறியதாவது
பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்த பேரூராட்சி பூங்காவினை சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் அவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாக சீர்கேடுகளினால் இதனை செயல்படுத்த முடியாமல் பராமரிப்பு பணிகளை செய்து தருவதற்கு தனியார் நிறுவனங்கள் சேவை நோக்கத்தோடு செய்து தர முன் வருகிறது. அவர்களிடம் ஒப்படைத்தால் சிறப்பாக செய்து தருவதற்கு தயாராக இருக்கின்றனர். அதற்கான அனுமதியினை வழங்கினால் புதிய தோற்றத்துடன் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமாக பூங்கா மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment