Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
தில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட, ரூ.20 கோடி கொடுப்பதாக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. தில்லியில் ஆட்சியமைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது, பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒருபோதும் இறங்கியதில்லை என்றும் அவர் கூறினார்.

0 comments: