Saturday, July 19, 2014
திருப்பூர் பெரியார் காலனி நேதாஜி நகரில் வசித்து வருபவர் நாகமணி (வயது33). இவரது கணவர் ரங்கசாமி. இவர்களுக்கு கலைவாணி (15) என்ற மகள் இருந்தார். கணவன்– மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாகமணி கணவர் ரங்கசாமியை விட்டு பிரிந்து தனது மகளுடன் திருப்பூரில் குடியேறினார்.
தனது மகள் தான் உலகம். அவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலைவாணி 2 பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் மன வேதனையில் இருந்தார். தாய் நாகமணி மகளுக்கு ஆறுதலும் தன்னம்பிக்கையும் கூறி வந்தார்.
இதனையடுத்து உடனடி தேர்வில் கலைவாணி தோல்வியடைந்த 2 பாடங்களையும் எழுதினார். தேர்வு முடிவு வெளியானது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். இதை அறிந்த தாய் தொடர்ந்து மகளுக்கு ஆறுதல் கூறிவந்தார்.
இந்நிலையில் தோழிகள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் கலைவாணி அவமானத்தால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்று தாய் வேலைக்கு சென்ற பின்னர் கலைவாணி வீட்டில் இருந்த சாணிப்படரை குடித்தார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. தட்டுத்தடுமாறி நடந்து சென்று அருகில் உள்ளவர்களிடம் நான் விஷம் குடித்து விட்டேன். எனது அம்மாவிடம் கூறிவிடுங்கள் என்று கூறி மயங்கி விட்டார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது தாய் நாகமணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது மாமாவிற்கும் தெரியப்படுத்தினர். 2 பேரும் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். கலைவாணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக இறந்தார். கணவரை விட்டு பிரிந்து மகளே தனது உலகம் என்று வாழ்ந்த நாகமணி மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தற்கொலை குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
0 comments:
Post a Comment