Saturday, July 19, 2014
திருப்பூர் பெரியார் காலனி நேதாஜி நகரில் வசித்து வருபவர் நாகமணி (வயது33). இவரது கணவர் ரங்கசாமி. இவர்களுக்கு கலைவாணி (15) என்ற மகள் இருந்தார். கணவன்– மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாகமணி கணவர் ரங்கசாமியை விட்டு பிரிந்து தனது மகளுடன் திருப்பூரில் குடியேறினார்.
தனது மகள் தான் உலகம். அவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலைவாணி 2 பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் மன வேதனையில் இருந்தார். தாய் நாகமணி மகளுக்கு ஆறுதலும் தன்னம்பிக்கையும் கூறி வந்தார்.
இதனையடுத்து உடனடி தேர்வில் கலைவாணி தோல்வியடைந்த 2 பாடங்களையும் எழுதினார். தேர்வு முடிவு வெளியானது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். இதை அறிந்த தாய் தொடர்ந்து மகளுக்கு ஆறுதல் கூறிவந்தார்.
இந்நிலையில் தோழிகள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் கலைவாணி அவமானத்தால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்று தாய் வேலைக்கு சென்ற பின்னர் கலைவாணி வீட்டில் இருந்த சாணிப்படரை குடித்தார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. தட்டுத்தடுமாறி நடந்து சென்று அருகில் உள்ளவர்களிடம் நான் விஷம் குடித்து விட்டேன். எனது அம்மாவிடம் கூறிவிடுங்கள் என்று கூறி மயங்கி விட்டார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது தாய் நாகமணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது மாமாவிற்கும் தெரியப்படுத்தினர். 2 பேரும் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். கலைவாணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக இறந்தார். கணவரை விட்டு பிரிந்து மகளே தனது உலகம் என்று வாழ்ந்த நாகமணி மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தற்கொலை குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment