Sunday, August 10, 2014
வடபழனி ஆற்காடு சாலையில் பிக்பஜார் உள்ளது. இதற்கு வெளியே 1½ வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை அனாதையாக நின்று கொண்டிருந்தது. நீலகலரில் ஜீன்சும், சிவப்பு கலரில் கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தான்.
வடபழனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி அந்த பகுதி வழியாக சென்றபோது குழந்தை அனாதையாக நின்றதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அங்கு விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் குழந்தை யார் என்று தெரியாது என்று கூறினார்.
உடனே அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு மாலை 4.30 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அந்த குழந்தை பற்றிய தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணி வரை குழந்தையை தேடி யாரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இரவில் அந்த குழந்தைக்கு பால், பிஸ்கட் கொடுக்கப்பட்டது.
அந்த குழந்தையை அதன் உரியவரிடம் ஒப்படைக்க சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தனக்கு தெரிந்த 300 நபர்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை.
இந்த குழந்தை பற்றி தகவல் அறிந்தவர்கள் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்குமாறு (044–23452635) அறிவிக்கப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
