Sunday, August 10, 2014
On Sunday, August 10, 2014 by Unknown in Break, திருப்பூர்
அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைப்பதில்லை, சாக்கடை வசதி இல்லை. ரோடு மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் நேரில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி செம்பியநல்லூர் தி.மு.க. ஊராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியம், பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் 12 பெண்கள் உள்பட 40–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் குமாரசாமி ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை உடனடியாக பராமரிப்பு செய்து சாக்கடை வசதி செய்து தருவதாகவும் உறுதி கூறினர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
