Saturday, August 30, 2014
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், உடுமலை வட்டாரத்தில் பெரிய வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க நடப்பு ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டருக்கு ஆகும் சாகுபடி செலவான ரூ. 12 ஆயிரத்தை மானியமாக தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது. எங்கெல்லாம் சின்ன வெங்காயம் விளைகிறதோ அங்கெல்லாம் பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் ஆகியவற்றை பயிரிடலாம்.
பெரிய வெங்காய சாகுபடியில் ஊடுபயிராக வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகளை பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம். பெரிய வெங்காயம் ஹெக்டேருக்கு 16 டன் வரை மகசூல் கிடைக்கும். உடுமலையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
பெரிய வெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி மூலம் பலவித பூச்சிகள் பெருகாமல் தடுக்கலாம். காய்கறி உற்பத்திக்கு தற்போது ஒருங்கிணைந்த உர உபயோகம் மான்யமாக ரூ.1200 வழங்கி அதற்கு இடுபொருளான பாஸ்பேட் பாக்ட்ரீயா, அசோஸ்பைரில்லம் வழங்கப்படும். விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்தால் அநேக சலுகைகளோடு காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
0 comments:
Post a Comment