Saturday, August 30, 2014
ஐக்கிய அரபு எமிரேட்சின் நகரங்களுள் ஒன்றான ஷார்ஜாவில் 118 கிலோகிராம் போதைப்பொருளுடன் 10 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காலித் துறைமுக பகுதியை திடிரென சுற்றிவளைத்த பொலிஸ் குழு இந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் 4 பேர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட பொலிசார் சற்று நேரத்திற்குள் தப்பியோடிய 6 கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 118 கிலோ போதைப்பொருளில் 110 கிலோ ஹசீஷா 8 கிலோ ஒபியம் மற்றும் கிரைஷ்டல் என்பனவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் அரேபிய, ஆசிய, மற்றும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என பொலிசார் குறிப்பிட்ட அதே நேரம் அவர்கள் குறிப்பாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை.
அண்மைக்காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைப்பற்றப்பட்ட அதிக எடை கொண்ட போதைப்பொருட்கள் இவையே என ஷார்ஜா பொலிஸ் பிரிகேடியர் முஹம்மத் ஈத் அல் மஸ்லும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் ஆஜராக்கப்படவுள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment