Saturday, August 30, 2014
ஐக்கிய அரபு எமிரேட்சின் நகரங்களுள் ஒன்றான ஷார்ஜாவில் 118 கிலோகிராம் போதைப்பொருளுடன் 10 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காலித் துறைமுக பகுதியை திடிரென சுற்றிவளைத்த பொலிஸ் குழு இந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் 4 பேர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட பொலிசார் சற்று நேரத்திற்குள் தப்பியோடிய 6 கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 118 கிலோ போதைப்பொருளில் 110 கிலோ ஹசீஷா 8 கிலோ ஒபியம் மற்றும் கிரைஷ்டல் என்பனவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் அரேபிய, ஆசிய, மற்றும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என பொலிசார் குறிப்பிட்ட அதே நேரம் அவர்கள் குறிப்பாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை.
அண்மைக்காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைப்பற்றப்பட்ட அதிக எடை கொண்ட போதைப்பொருட்கள் இவையே என ஷார்ஜா பொலிஸ் பிரிகேடியர் முஹம்மத் ஈத் அல் மஸ்லும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் ஆஜராக்கப்படவுள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
0 comments:
Post a Comment